இந்தியா

கடைசி கட்ட தேர்தலில் அதிக சொத்து உள்ள பெண் வேட்பாளர்

Published On 2024-05-31 09:00 IST   |   Update On 2024-05-31 09:00:00 IST
  • ஹர்சிம்ரத் கவுரின் மாமனார் பிரகாஷ் சிங் பாதல்.
  • பதிண்டா தொகுதி சிரோன்மணி அகாலிதளத்தின் கோட்டையாகும்.

அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலம் பதிண்டா பாராளுமன்ற தொகுதியில் சிரோன்மணி அகாலிதளம் சார்பில் 4-வது முறையாக போட்டியிடுகிறார் ஹர்சிம்ரத் கவுர். இவருடைய கணவர் சுக்பீர் சிங் பாதல்.

ஹர்சிம்ரத் கவுரின் மாமனார் பிரகாஷ் சிங் பாதல். இவர் பஞ்சாப் மாநிலத்தில் 5 முறை முதல்-மந்திரியாக இருந்தவர். பதிண்டா தொகுதி சிரோன்மணி அகாலிதளத்தின் கோட்டையாகும்.

ஹர்சிம்ரத் கவுர், தனது வேட்பு மனுவுடன் இணைத்துள்ள பிரமாண பத்திரத்தில் தனக்கு ரூ.198 கோடிக்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

நாளை (சனிக்கிழமை) நடைபெறும் கடைசி கட்ட தேர்தலில் களத்தில் இருக்கும் 904 வேட்பாளர்களில், இவரே அதிக சொத்து உள்ள வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News