இந்தியா

5-வது முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்

Published On 2023-02-01 05:55 GMT   |   Update On 2023-02-01 08:32 GMT
  • தொடர்ச்சியாக ஐந்து முறை பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார்
  • மத்திய பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்தது

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் இன்று 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன்மூலம் மனமோகன சிங, அருண் ஜெட்லி மற்றும் சிதம்பரம் போனற ஜாம்பவான்களைத் தொடர்ந்து, ஐந்து முறை தொடர்ச்சியாக பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்த 6-வது நிதி மந்திரி என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த 2023ஆம் ஆண்டின் பொது பட்ஜெட்டானது, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்தாவது முறையாகும். முன்னாள் மத்திய நிதி மந்திரிகள் அருண் ஜெட்லி, ப சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா, மன்மோகன் சிங் மற்றும் மொரார்ஜி தேசாய் ஆகியோர் ஐந்து முறை பட்ஜெட்டை சமர்ப்பித்த மற்ற மந்திரிகள் ஆவர்.

மத்திய பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 12 பைசா அதிகரித்து 81.76 ஆக உள்ளது.

Tags:    

Similar News