இந்தியா

இந்தியாவில் முதல்முறையாக 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து ரோபோ மூலம் நோயாளிக்கு இதய அறுவை சிகிச்சை

Published On 2025-03-29 10:50 IST   |   Update On 2025-03-29 10:50:00 IST
  • பெங்களூரிவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் 35 வயதான வாலிபர் ஒருவர் இதய பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டார்.
  • ரோபோவை பயன்படுத்தி, பெங்களூரில் உள்ள நோயாளிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

புதுடெல்லி:

ரோபோக்களின் பயன்பாடு பல்வேறு துறைகளிலும் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் மருத்துவ துறையிலும் ரோபோக்கள் ஈடுபடுத்தப்படுகிறது.

குறிப்பாக பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து டாக்டர்கள் ரோபோ மூலம் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்த சம்பவங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் இந்தியாவிலும் முதல்முறையாக 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு தூரத்தில் இருந்து ரோபோடிக் மூலம் ஒரு நோயாளிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரிவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் 35 வயதான வாலிபர் ஒருவர் இதய பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இதயத்தின் மேல் அறைகளுக்கு இடையில் ஒரு துளை இருக்கும் இழ பிறவி நிலையான சிக்கலான நோய் என்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து குருகிராமில் உள்ள எஸ்.எஸ்.இன்னோவேஷன் நிறுவன தலைவர் டாக்டர் சுதிர்ஸ்ரீவஸ்தவா தலைமையில் குருகிராமில் இருந்தே இந்தியாவில் முதல் முறையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அறுவை சிகிச்சை ரோபோவை பயன்படுத்தி, பெங்களூரில் உள்ள நோயாளிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ரோபோடிக் கமிட்டி மூலம் குருகிராமில் இருந்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் பெங்களூரில் உள்ள நோயாளிக்கு தொலை நிலை வழியாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சையின் போது, அறுவை சிகிச்சை மருத்துவர் 3டி கண்ணாடிகளை அணிந்து ஒரு கன்சோலுக்கு பின்னால் அமர்ந்து திரையை பார்த்துக்கொண்டே அறுவை சிகிச்சையை நடத்துகிறார். ரோபோடிக் கைகளின் உதவியுடன், உதவி மருத்துவர் முன்னிலையில் வேறு ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

இந்த அறுவை சிகிச்சையை வழிநடத்திய டாக்டர் அருள்பெர்டாடோ கூறுகையில், எஸ்.எஸ்.மந்த்ரா ரோபோடிக் அமைப்பு மூலம் மிகவும் பயன் உள்ளதாகவும், துல்லியமாகவும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதயம் போன்ற மிக முக்கியமான உறுப்புகளில் மிக நுணுக்கமாக சிறந்த நம்பிக்கையுடன் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிந்தது என்றார்.

Tags:    

Similar News