இந்தியா

SIR குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

Published On 2025-12-02 11:38 IST   |   Update On 2025-12-02 11:38:00 IST
  • நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 2ம் நாள் கூட்டம் அமளியுடன் தொடங்கியது.
  • எதிர்க்கட்சி எம்.பி.க்கள் SIR பணிகளை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நேற்று (டிசம்பர் 1) தொடங்கியது. நேற்று எதிர்க்கட்சிகள் SIR குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இன்று காலை பாராளுமன்றம் தொடங்குவதற்கு முன்பு பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் SIR பணிகளை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 2ம் நாள் கூட்டம் அமளியுடன் தொடங்கியது. அப்போது வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தல். எம்.பி.க்களை பேச விடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர்.

SIR குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

Similar News