இந்தியா

டெல்லியில் முககவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரத்து

Published On 2022-10-05 11:18 IST   |   Update On 2022-10-05 11:18:00 IST
  • டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பொது இடங்களில் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
  • டெல்லியில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பொது இடங்களில் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் முககவச அபராதம் நீக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த ரூ.500 அபராதத்தை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News