இந்தியா
ஆந்திராவில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது மிச்சாங் புயல்
- பாபட்லா- ஓங்கோல் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடந்தது.
- மிச்சாங் புயல் எதிரொலியால் ஆந்திராவில் 314 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் பாபட்லா அருகே மிச்சாங் புயல் கரையை கடந்தது. பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை மிச்சாங் புயல் அதிதீவிர புயலாக கரையை கடந்தது.
பாபட்லா- ஓங்கோல் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடந்த நிலையில் ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருகிறது.
மேலும், மிச்சாங் புயல் எதிரொலியால் ஆந்திராவில் 314 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.