இந்தியா

பொங்கல் தினத்தன்று நடைபெற இருந்த சிஏ தேர்வு மாற்றம்

Published On 2024-11-26 09:09 IST   |   Update On 2024-11-26 11:28:00 IST
  • பொங்கல் நாளில் சி.ஏ. தேர்வு நடத்த கடும் எதிர்ப்பு கிளம்பியது.
  • தமிழகத்தில் ஜனவரி 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை பொங்கல் அரசு விடுமுறை தினமாகும்.

புதுடெல்லி:

ஜனவரி 14-ல் Business laws மற்றும் ஜனவரி 16-ல் Quantitative Apitude தேர்வு நடைபெறுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் மற்றும் உழவர் திருநாள் அன்று மத்திய அரசின் சிஏ பவுண்டேசன் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் பொங்கல் திருநாள்களில் நடைபெற இருந்த சிஏ தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பொங்கல் திருநாள்களில் நடைபெற இருந்த சிஏ தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜன.14-ந்தேதி நடைபெற இருந்த பட்டயக்கணக்காளர் தேர்வு ஜன.16-ந்தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் (ICAI) தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News