இந்தியா

மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On 2023-09-18 17:12 GMT   |   Update On 2023-09-18 17:12 GMT
  • மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இம்மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி:

பாராளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று தொடங்கிய சிறப்புக் கூட்டத்தில், பாராளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் குறித்து விவாதிக்கப்ட்டது. நாளை முதல் புதிய கட்டிடத்தில் நடைபெறும் பாராளுமன்ற கூட்டங்களில் பல மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரிலே மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News