தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்
- மணமகன் மீது சந்தேகம் ஏற்பட்டது.
- மணமகள் ஆவேசமடைந்து திருமணத்தை நிறுத்தி விட்டு மண்டபத்தில் இருந்து வெளியேறினார்.
பீகார் மாநிலம் மேற்கு சாம்பரான் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் பைதாபூர் பகுதியை சேர்ந்த மணமகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து திருமணத்திற்காக மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக மேற்கு சாம்பரானுக்கு சென்றனர்.
தொடர்ந்து திருமண சடங்குகள் நடைபெற்ற நிலையில் மணமகன் வெகுநேரமாக கண்ணாடி அணிந்திருந்ததை மணமகள் கவனித்துள்ளார். அவருக்கு மணமகன் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஆனாலும் உடனடியாக அதை வெளிக்காட்டவில்லை.
ஆனால் திருமண சடங்குகள் நடைபெற்ற போது மணமகன் கண்ணாடியை கழற்றிய போது தான் அவருக்கு கண் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதை மறைத்து அவர் திருமணம் செய்ய முயன்றது தெரியவந்தது. இதையறிந்த மணமகள் ஆவேசமடைந்து திருமணத்தை நிறுத்தி விட்டு மண்டபத்தில் இருந்து வெளியேறினார்.
இதனால் திருமண மண்டபத்தில் குழப்பம் நிலவியது. இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகியது.