இந்தியா

தமிழக ஆசிரியர்கள் இருவருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு

Published On 2023-08-26 18:05 GMT   |   Update On 2023-08-26 18:05 GMT
  • டெல்லி விஞ்ஞான் பவனில் வரும் செப்டம்பர் 5ம் தேதி விழா நடைபெறுகிறது.
  • விழாவில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட உள்ளது.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், தமிழகத்தில் மதுரை மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய நல்லாசிரியருக்கான விருதுகள், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமாருக்கும், தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை எஸ்.எஸ்.மாலதிக்கும் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், டெல்லி விஞ்ஞான் பவனில் வரும் செப்டம்பர் 5ம் தேதி நடைபெறும் விழாவில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட உள்ளது.

Tags:    

Similar News