இந்தியா

எதிர் கோஷம் எழுப்பியதால் கோபம்: பெண்களை 'சைத்தான்' என கூறிய வேட்பாளர்

Published On 2024-03-30 05:52 GMT   |   Update On 2024-03-30 05:52 GMT
  • பிரச்சார வாகனத்தில் இருந்து சீனிவாஸ் சைக்கிள், சைக்கிள் என மைக்கில் பேசினார்.
  • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமான பேன், பேன் சத்தமாக கத்தினர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் திருவூர் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கோலிகாபுடி சீனிவாஸ் போட்டியிடுகிறார்.

இவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார். அந்த பகுதியில் பிரச்சார வாகனத்தில் இருந்து சீனிவாஸ் சைக்கிள், சைக்கிள் என மைக்கில் பேசினார்.

அப்போது கீழே நின்று கொண்டு இருந்த பெண்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமான பேன், பேன் சத்தமாக கத்தினர்.

இதனால் கடுப்பான சீனிவாஸ் அங்கிருந்த பெண்களை சைத்தான் சைத்தான் என கூறிவிட்டு வாகனத்தை வேறு ஊருக்கு ஓட்டுமாறு கூறிச் சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags:    

Similar News