இந்தியா
ஓட்டலில் தரைதளத்தில் லிப்ட் மோதி 9 பேர் படுகாயம்
- காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
- சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி:
நொய்டாவில் உள்ள ஒரு ஓட்டல் லிப்டில் அளவுக்கு அதிகமானோர் சென்றனர். அப்போது அந்த லிப்ட் பாரம் தாங்காமல் 3-வது தளத்தில் இருந்து வேகமாக கீழே வந்து தரை தளத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் லிப்டில் பயணம் செய்த 9 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 3 பேருக்கு எலும்புகள் முறிந்தது. காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.