இந்தியா
சிறுமிக்கு பாலியல் தொல்லை- 77 வயது பாதிரியார் கைது
- சிறுமிக்கு பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
- போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் செமவூன் ரம்பானை கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் ஊன்னுக்கல் பகுதியில் ஒரு தேவாலயம் உள்ளது. இதில் பத்தனம் திட்டையை சேர்ந்த செமவூன் ரம்பான் (வயது 77) என்பவர் பாதிரியாராக உள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று பாதிரியார் அந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த ஊன்னுக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் சிறுமிக்கு பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் செமவூன் ரம்பானை கைது செய்தனர்.