இந்தியா

பனிச்சரிவு

ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவு - ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு

Published On 2022-11-18 19:34 GMT   |   Update On 2022-11-18 19:34 GMT
  • ஜம்மு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது.
  • பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு:

கடந்த சில தினங்களாகவே ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் மச்சிலி செக்டாரில் நேற்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.

இந்த பனிச்சரிவில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் சிக்கினர். இதில், 3 வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News