இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் வீடு இடிந்து மாற்றுத்திறனாளி சகோதரர்கள் 3 பேர் பலி
- இடிபாடுகளில் சிக்கி வீட்டில் இருந்த 3 மாற்றுத்திறனாளி சகோதரர்கள் பரிதாபமாக இறந்தனர்.
- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் வரை பலியாகி விட்டனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்ஸ்வார் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் கடந்த 3 நாட்களாக இடைவிடாமல் மழை கொட்டியது. இந்த மழைக்கு அஜனாபுத்தூர் என்ற கிராமத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி வீட்டில் இருந்த பப்பு குமார், சாஜன்குமார், ராஜேஸ்குமார் ஆகிய 3 மாற்றுத்திறனாளி சகோதரர்கள் பரிதாபமாக இறந்தனர். இவர்கள் 3 பேருக்கும் பிறவியிலேயே கண் பார்வை தெரியாது.
இது பற்றி அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றி 3 சகோதரர்களின் உடல்களை மீட்டனர். அவர்களது குடும்பத்தை சேர்ந்த மற்றவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் வரை பலியாகி விட்டனர்.