இந்தியா
பிரதமர் மோடி

மத்தியபிரதேசத்தில் 5.21 லட்சம் பேருக்கு வீடுகள் கிடைக்கிறது- பிரதமர் மோடி காணொலியில் பங்கேற்பு

Published On 2022-03-27 08:36 GMT   |   Update On 2022-03-27 08:36 GMT
மத்திய பிரதேசமாநிலத்தில் இதுவரை 24.10 லட்சம் பேருக்கு இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டிகொடுக்கப்பட்டுள்ளது.

போபால்:

பிரதமரின் வீடு கட்டும் திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராம புறம்) மூலம் மத்திய பிரதேச மாநிலத்தில் வருகிற 29-ந் தேதி 5.21 லட்சம் பயனாளிகள் பயன் அடைகிறார்கள்.

வீடுகளை ஒப்படைக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொள்கிறார். மத்திய பிரதேசமாநிலத்தில் இதுவரை 24.10 லட்சம் பேருக்கு இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டிகொடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News