இந்தியா
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

4 மாநிலங்களில் வெற்றிப்பெற்ற பாஜக உள்கட்சி பூசலால் ஆட்சி அமைக்க தாமதிக்கிறது- கெஜ்ரிவால்

Published On 2022-03-20 09:22 GMT   |   Update On 2022-03-20 09:22 GMT
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இன்று ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெல்லியில் இருந்து காணொளி மூலம் கெஜ்ரிவால் எம்எல்ஏக்களிடம் பேசினார்.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த 5 மாநிலங்களில் 4 மாநிலங்களை பாஜக கைப்பற்றியது. பஞ்சாப்பில் காங்கிரஸ், பாஜகவை வீழ்த்தி ஆம் ஆத்மி அபாரமாக வெற்றிப்பெற்று முதல் முறையாக ஆட்சி அமைத்தது.

இந்நிலையில், நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றிப் பெற்றாலும், கட்சிக்குள் நிலவும் பூசல் காரணமாக ஆட்சி அமைக்க முடியவில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இன்று நடைபெற்ற ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் டெல்லியில் இருந்து காணொளி மூலம் கெஜ்ரிவால் எம்எல்ஏக்களிடம் பேசினார்.

அப்போது அவர் மேலும் கூறியதாவது:-  

நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்ற பாஜக கட்சிக்குள் உள்ள உட்பூசல் காரணமாக இதுவரை ஆட்சி அமைக்க முடியவில்லை. நான்கு மாநிலங்களில் உள்ள கட்சி அணிகளில் உள்ள உட்கட்சி பூசலைக் கையாள்வதில் பாஜக தொடர்ந்து மும்முரமாக இருக்கிறது. பஞ்சாப் சட்டசபையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் உடனடியாக பதவியேற்றனர். நேரத்தை வீணடிக்காமல் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அரசு வேலை செய்யத் தொடங்கிவிட்டது.

இத்தனை நாட்களுக்குப் பிறகும் கட்சியால் ஆட்சி அமைக்க முடியாத நிலையில், நான்கு மாநிலங்களில் உள்ள பாஜக அரசுகள் என்ன செய்யும்.

நாடு முழுவதும் பகவந்த் மான் மற்றும் அவரது படைப்புகளைப் பற்றிதான் பேசுகிறது. அக்டோபரில் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வெளியிடப்பட்டுள்ளத. வரும் நாட்களில் விவசாயிகளுக்கு காசோலைகள் வழங்கப்படும். அரசாங்கத்தை அமைத்து மூன்று நாட்களுக்குள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளீர்கள். மூன்றே நாட்களில் பகவந்த் மானின் பணி குறித்து நான் மகிவும் பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. தீயை அணைக்கும் பணிகளில் பெண்களை ஈடுபடுத்த திட்டம்- தமிழக அரசு பரிசீலனை
Tags:    

Similar News