இந்தியா
சமாஜ்வாடி கட்சியில் இருந்து முன்னாள் மந்திரி உமா கிரண் 6 ஆண்டுகளுக்கு நீக்கம்
கட்சி விரோத நடவடிக்கைகளில் யார் ஈடுபட்டாலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று முசாபர்நகர் மாவட்ட தலைவர் பிரமோத் தியாகி கூறியுள்ளார்.
முசாபர்நகர்:
உத்தர பிரதேச மாநிலத்தில், சமாஜ்வாடி கட்சியில் இருந்து முன்னாள் மந்திரி உமா கிரண் 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் நீக்கப்படுவதாக முசாபர்நகர் மாவட்ட தலைவர் பிரமோத் தியாகி அறிவித்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் யார் ஈடுபட்டாலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று தியாகி கூறியுள்ளார்.
உமா கிரண், புர்காசி தொகுதியில் போட்டியிடுவதற்கு கட்சி தலைமையிடம் சீட் கேட்டதாகவும், சீட் வழங்கப்படாததால் அவர் கோபமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
சந்திர சேகர் ஆசாத் தலைமையிலான ஆசாத் சமாஜ் கட்சி (கே) சார்பில் உமா கிரணுக்கு சீட் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.