செய்திகள்
கோப்புப்படம்

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 30,773 பேருக்கு தொற்று

Published On 2021-09-19 05:03 GMT   |   Update On 2021-09-19 05:03 GMT
நாடு முழுவதும் நேற்று 85,42,732 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80 கோடியே 43 லட்சம் டோஸ்களை கடந்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,773 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 34 லட்சத்து 48 ஆயிரத்து 163 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு 34,403, 35,662 ஆக இருந்த நிலையில் நேற்று சற்று குறைந்துள்ளது.

கேரளாவில் கடந்த 2 நாட்களாக பாதிப்பு 22 ஆயிரத்தை தாண்டியிருந்த நிலையில் நேற்று 19,325 ஆக குறைந்துள்ளது.

மகாராஷ்டிராவில் 3,391, தமிழ்நாட்டில் 1,653, ஆந்திராவில் 1,174, மிசோரத்தில் 1,104 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 143, மகாராஷ்டிராவில் 80 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 309 பேர் இறந்துள்ளனர்.

இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,44,838 ஆக அதிகரித்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 1,38,469 பேர் அடங் குவர்.

கொரோனாவின் பிடியில் இருந்து மேலும் 38,945 பேர் மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 26 லட்சத்து 71 ஆயிரத்து 167 ஆக உயர்ந்தது.

தற்போது 3,32,158 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று முன்தினத்தை விட 8,481 குறைவு ஆகும்.



நாடு முழுவதும் நேற்று 85,42,732 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80 கோடியே 43 லட்சம் டோஸ்களை கடந்துள்ளது.

இதற்கிடையே நேற்று 15,59,895 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 55 கோடியே 23 லட்சமாக உயர்ந்திருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News