செய்திகள்
டெல்லியில் இன்று புதிதாக 142 பேருக்கு கொரோனா: 2 பேர் பலி
டெல்லியில் இன்று புதிதாக 142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் இன்று புதிதாக 142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது வரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,36,529 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 135 பேர் டிஸ்சார்ஜ் ஆக இதுவரை 6,24,592 பேர் குணமடைந்துள்ளனர். இன்று 2 பேர் உயிரிழக்க பலியானோரின் எண்ணிக்கை 10,886 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது வரை 1,051 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.