செய்திகள்
கோப்பு படம்.

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,250-பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-10-09 14:23 GMT   |   Update On 2020-10-09 14:23 GMT
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,250- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,250-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் சுமார் 68 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பாதிப்புடன் கேரளாவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்து 756- ஆக உள்ளது.

அதேபோல், கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் சுமார் 8 ஆயிரம் பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். கேரளாவில் இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர். திருவனந்தபுரம், கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கும் மேலாக பதிவாகியுள்ளது. 
Tags:    

Similar News