செய்திகள்
பரிசோதனை செய்யும் ஊழியர்

டெல்லியில் இன்று மேலும் 2,737 பேருக்கு கொரோனா

Published On 2020-09-03 20:05 IST   |   Update On 2020-09-03 20:05:00 IST
டெல்லியில் இன்று மேலும் 2,737 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று ஒரே நாளில் மேலும் 2,737 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,82,306 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும் 19 பேர் உயிரிழந்ததையடுத்து, டெல்லியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,500 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 17,692 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,60,114 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Similar News