செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

10 சதவீத இட ஒதுக்கீடு மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம்- சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்

Published On 2020-01-07 09:45 GMT   |   Update On 2020-01-07 09:45 GMT
10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவது தொடர்பாக மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம் என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தது.
புதுடெல்லி:

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மத்திய அரசு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குகிறது.

இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவது தொடர்பாக மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம் என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தது.

இதில் மத்திய அரசு தலையிட முடியாது என்றும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளுக்கு மட்டுமே இந்த இட ஒதுக்கீடு பொருந்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News