செய்திகள்

அரசு தடுமாறும் நேரங்களில் ஆக்கபூர்வமான அறிவுரைகளை ஆர்.எஸ்.எஸ். வழங்கும்- மோகன் பகவத் உறுதி

Published On 2019-06-02 20:29 GMT   |   Update On 2019-06-02 20:29 GMT
உத்தரபிரதேசத்தின் கான்பூரில் சங் பரிவார் அமைப்பின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.
கான்பூர்:

உத்தரபிரதேசத்தின் கான்பூரில் சங் பரிவார் அமைப்பின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் மகத்தான அதிகாரத்தை பெற்றிருக்கின்றன. அதற்காக அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. அரசு எந்த நேரத்தில் தடுமாறினாலும், அப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆக்கபூர்வமான அறிவுரைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கும்’ என்று தெரிவித்தார். 

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சிக்குப்பின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மற்றொரு கூட்டத்தில் மோகன் பகவத் பங்கேற்றார். அதில் அவர் உரையாற்றும்போது, சமூகத்தில் சமத்துவத்தை கொண்டு வருமாறும், கல்வியறிவின்மை, போதைப்பொருள், குடிப்பழக்கம் போன்ற சமூக தீமைகளை அகற்றுமாறும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை கேட்டுக்கொண்டார். மேலும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஆணவத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது எனவும் அவர் அறிவுறுத்தினார்.
Tags:    

Similar News