செய்திகள்

ஜெய்ஸ்ரீராம் கோஷம் மூலம்பா.ஜனதா மதத்தையும், அரசியலையும் கலக்கிறது- மம்தா சாடல்

Published On 2019-06-03 00:48 IST   |   Update On 2019-06-03 00:48:00 IST
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் கார் கடந்து செல்கிறபோது, ஜெய்ஸ்ரீராம் என மக்கள் கோஷமிடுவது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி விடுகிறது.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் கார் கடந்து செல்கிறபோது, ஜெய்ஸ்ரீராம் என மக்கள் கோஷமிடுவது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி விடுகிறது. அப்படி கோஷமிடுகிறவர்களுடன் அவர் மோதுகிற சூழலும் உருவானது.

இதையொட்டி மம்தா பானர்ஜி தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பா.ஜனதா கட்சியை சாடி உள்ளார்.

அதில் அவர், “ ஜெய் சியாராம், ஜெய்ராம்ஜி கி, ராம் நாம் சத்யா ஹை போன்றவை மத மற்றும் சமூக சித்தாந்தங்களை கொண்டுள்ளன. இந்த உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் பா.ஜனதா கட்சி மதத்தையும், அரசியலையும் கலந்து, தவறான வழியில் ஜெய்ஸ்ரீராம் கோஷத்தை தங்கள் கட்சி கோஷமாக ஆக்கி விட்டது” என சாடி உள்ளார்.

மேலும், “ இது வேண்டும் என்றே வெறுப்பு சித்தாந்தத்தை வன்முறை மூலம் விற்பனை செய்யும் முயற்சி ஆகும். இதை நாம் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்” எனவும் கூறி உள்ளார்.

Similar News