செய்திகள்
பானி புயலுக்கு ஒடிசா ஐஏஎஸ் சங்கத்தினர் தலா ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி
புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு தலா ரூ.10 ஆயிரம் முதல் மந்திரி நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று ஐ.ஏ.எஸ். சங்கத்தினர் அறிவித்துள்ளனர். #CycloneFani
புவனேஷ்வர்:
பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகள் நிவாரண நிதியை அளித்து வருகின்றன.
இந்நிலையில், பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு அம்மாநில ஐஏஎஸ்கள் தலா 10 ஆயிரம் ரூபாய் முதல் மந்திரி நிவாரண நிதியில் அளிக்க உள்ளோம் என ஐ.ஏ.எஸ். சங்கத்தினர் அறிவித்துள்ளனர். #CycloneFani