செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது

Published On 2019-04-28 08:09 GMT   |   Update On 2019-04-28 08:09 GMT
போலீசார் மீது தாக்குதல் நடத்த முயன்ற பயங்கரவாதிகள் இருவரை ஜம்மு காஷ்மீர் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். MilitantsArrested
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பட்காம் மாவட்டத்தில் மாநில போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, வதோரா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் 2 பேரை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் மீது தாக்குதல் நடத்த முயன்றவர்கள் என தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #MilitantsArrested
Tags:    

Similar News