செய்திகள்

மிசோரம் மாநிலத்தில் மதுவிலக்கு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

Published On 2019-03-09 11:11 GMT   |   Update On 2019-03-09 11:11 GMT
மிசோரம் மாநிலத்தில் மதுவிலக்கு கொண்டு வருவது தொடர்பான சட்ட மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. #MizoramCabinet #LiquorProhibitionBill
ஐசால்:

மிசோரம் மாநிலத்தில் முதலமைச்சர் சோரம்தங்கா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத்தில் மதுவிலக்கு சட்டத்தை கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், மதுவிலக்கை அமல்படுத்த வகை செய்யும் மசோதாவுக்கு (மிசோரம் மதுபான தடைச் சட்ட மசோதா -2019) அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

எனவே, வரும் 20-ம் தேதி தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, இந்த மதுவிலக்கு மசோதா தாக்கல் செய்யப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



ஆளுங்கட்சியான மிசோ தேசிய முன்னணி, கடந்த நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம்’ என வாக்குறுதி அளித்திருந்தது.

மிசோரம் மாநிலத்தில் 1997 முதல் ஜனவரி 2015 வரை பூரண மதுவிலக்கு சட்டம் நடைமுறையில் இருந்தது. அதன்பின்னர் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் மதுக்கடைகளை திறக்க காங்கிரசு அரசு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது. #MizoramCabinet #LiquorProhibitionBill
Tags:    

Similar News