செய்திகள்

காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் விபத்து - 10 பேர் பலி

Published On 2019-03-02 10:40 GMT   |   Update On 2019-03-02 10:40 GMT
காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்தில் 10 பேர் பலியாகினர். மேலும் 34 பேர் படுகாயம் அடைந்தனர். #JKAccidents
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் நேற்றிரவு உதம்பூர், கிஷ்துவார், ரம்பான் ஆகிய  இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 2 பெண்கள் உட்பட, 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 34 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் சந்தே கிராமத்தில் சுமார் 40 பேர் பயணம் செய்த தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருக்கிறது.மலைப்பாங்கான சாலையில் வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த பேருந்து, பள்ளத்தாக்கில் விழுந்தது.

இந்த விபத்தில் முகமது இக்பால் பர்கத், மன்சூர் அகமது, ஃபரூக் அகமது, அசியா பஷீர், ஜவாத் அகமது ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 32 பேர் பலத்த காயமடைந்தனனர். இவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் அகமது மிர் என்பவர் வழியிலேயே இறந்தார். 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல் கிஷ்துவார் மாவட்டத்தில் இன்று காலை 9.40 மணியளவில் முல்கம்பிடின் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் ஒரு பெண் உள்பட 3 பேர் பலியானார். 3 பேர் காயமடைந்தனர்.

இன்று காலை ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், ரம்பானுக்கு அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், லாரியின் ஓட்டுனர் ஜம்முவைச் சேர்ந்த குருதேவ் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். #JKAccidents
Tags:    

Similar News