செய்திகள்
பாலக்காடு அருகே யானைகளை சுட்டுக்கொன்ற 2 வாலிபர்கள் கைது
பாலக்காடு அருகே யானைகளை சுட்டு கொன்ற 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அமைதி பூங்கா அருகே உள்ள மணலியம்பாடம் வனப்பகுதியில் ஒரு ஆண் மற்றும் பெண் யானை இறந்து கிடந்தது.இதனை ரோந்து சென்ற வன ஊழியர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த இரு யானைகளும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மணலியம்பாடம் ஜபீர் (35), மலப்புரம் மாவட்டம் நிலம்பூரை சேர்ந்த பிஜூ (26) ஆகியோர் இரு யானைகளையும் சுட்டு கொன்றது தெரிய வந்தது.
அவர்கள் இருவரையும் கைது செய்தனர். கைதான 2 பேரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தந்தங்களை அறுப்பதற்காக பயன்படுத்திய கட்டிங் எந்திரம், அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.யானைகளை கொன்று அதன் தந்தங்களை திருட முயன்றது தெரிய வந்தது. கொல்லப்பட்ட இரு யானைகளையும் மன்னார்காடு கால்நடை டாக்டர் ஷாஜி பிரேத பரிசோதனை நடத்தினார். யானைகளை சுட்டு கொன்ற சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #tamilnews
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அமைதி பூங்கா அருகே உள்ள மணலியம்பாடம் வனப்பகுதியில் ஒரு ஆண் மற்றும் பெண் யானை இறந்து கிடந்தது.இதனை ரோந்து சென்ற வன ஊழியர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த இரு யானைகளும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மணலியம்பாடம் ஜபீர் (35), மலப்புரம் மாவட்டம் நிலம்பூரை சேர்ந்த பிஜூ (26) ஆகியோர் இரு யானைகளையும் சுட்டு கொன்றது தெரிய வந்தது.
அவர்கள் இருவரையும் கைது செய்தனர். கைதான 2 பேரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தந்தங்களை அறுப்பதற்காக பயன்படுத்திய கட்டிங் எந்திரம், அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.யானைகளை கொன்று அதன் தந்தங்களை திருட முயன்றது தெரிய வந்தது. கொல்லப்பட்ட இரு யானைகளையும் மன்னார்காடு கால்நடை டாக்டர் ஷாஜி பிரேத பரிசோதனை நடத்தினார். யானைகளை சுட்டு கொன்ற சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #tamilnews