செய்திகள்

காங்கிரஸ் கட்சியால் நாட்டில் ஜனநாயகத்தை வளர்க்க முடியாது: அமித் ஷா

Published On 2019-02-17 14:22 GMT   |   Update On 2019-02-17 14:22 GMT
குடும்ப அரசியல் நடத்தி வரும் காங்கிரஸ் கட்சியால், நாட்டில் ஜனநாயகத்தை வளர்க்க முடியாது என பா.ஜனதா தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். #BJP #Amitshah
கவுகாத்தி

பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது ‘‘ஜவர்ஹலால் நேரு, இந்தியா, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல், காந்தி, வருங்காலத்தில் உள்ள பெயரை நான் குறிப்பிடவில்லை.

காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் எந்தவொரு கேள்வியும் எழுப்ப முடியாது. இதுபோன்ற கட்சிகளால் நாட்டின் ஜனநாயத்தை வளர்த்து, அதற்கான நோக்கத்தை நிறைவேற்ற முடியாது. உள் ஜனநாயகம் இல்லாதபோது, எப்படி நாட்டின் ஜனநாயத்தை வலிமைப் படுத்த முடியும். ஒரேயோரு குடும்பம் பட்டும் 55 வருடம் நாட்டை ஆண்டுள்ளது. ஆனால், நாடு அடைந்தது என்ன?’’ என்றார்.
Tags:    

Similar News