செய்திகள்

பொக்ரானில் இந்திய போர் விமானங்களின் மெய்சிலிர்க்கும் சாகசம் - சச்சின் பார்வையிட்டார்

Published On 2019-02-16 19:18 IST   |   Update On 2019-02-16 19:18:00 IST
ராஜஸ்தான் மாநிலம், பொக்ரான் பகுதியில் இன்று இந்திய போர் விமானங்களின் நிகழ்த்திய மெய்சிலிர்க்கும் சாகசங்களை விமானப்படை தளபதி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். #IAchief #SachinTendulkar
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் முன்னர் இந்தியா வெற்றிகரமாக அணுகுண்டு சோதனை நடத்திய பொக்ரான் பகுதியில்  இந்திய விமானப்படையின் வல்லைமையையும், நமது வெடிகுண்டுகளின் ஆற்றலையும் பறைசாற்றும் வகையில் ‘வாயு சக்தி’ என்று போர் சாகசப் பயிற்சிகள் இன்று நடைபெற்றன.



இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து, சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி சாகங்களை நிகழ்த்தின.



மெய்சிலிர்க்கும் இந்த சாகசக் காட்சிகளை இந்திய விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். #IAchief #BSDhanoa #SachinTendulkar #IAchiefwitness #Sachinwitness #VayuShakti2019 #Pokranrange
Tags:    

Similar News