செய்திகள்

கோமதி ஆறு வளர்ச்சி திட்டத்தில் மோசடி - 4 மாநிலங்களில் அமலாக்க துறை சோதனை

Published On 2019-01-25 03:11 GMT   |   Update On 2019-01-25 03:11 GMT
கோமதி ஆறு வளர்ச்சி திட்டத்தில் நடந்த மோசடி தொடர்பாக 4 மாநிலங்களில் மோசடியில் தொடர்புடைய அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். #Gomtiriver #ED
புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலத்தில் கோமதி ஆறு வளர்ச்சி திட்டம் கடந்த சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் இருந்தபோது ரூ.1,500 கோடியில் நடந்தது. இதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக தற்போதைய மாநில பா.ஜ.க. அரசு குற்றம்சாட்டியது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தினார்.



இதையடுத்து கடந்த ஆண்டு இது குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. அதே சமயம் அமலாக்க துறையும் பண மோசடி வழக்கு பதிவு செய்தது. இந்த மோசடியில் தலைமை என்ஜினீயர் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா ஆகிய 4 மாநிலங்களில் இந்த மோசடியில் தொடர்புடைய அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் வீடுகளில் ஆவணங்கள் ஏதும் உள்ளதா? என அமலாக்க துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். #Gomtiriver #ED
Tags:    

Similar News