செய்திகள்

திருமண விழாவில் துப்பாக்கிச்சூடு - 2 பெண்கள் பலி

Published On 2019-01-18 10:24 GMT   |   Update On 2019-01-18 10:24 GMT
உத்தரப்பிரதேசத்தின் மொரதாபாத்தில் நடந்த திருமண விழாவில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரு பெண்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. #CelebratoryFiring
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நேற்று திருமண விழா நடைபெற்றது. அப்போது, மணமகன் வீட்டார் உற்சாக மிகுதியில் தங்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கியால் சுட்டனர்.

இதில், ராஷ்மி மற்றும் குசும் என்ற 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ராஜ்ராணி, ராஜ்குமாரி, ஷிவ்ராணி மற்றும் சோனம் ஆகிய 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். துப்பாக்கிச் சூடு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமண விழாவில் துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #CelebratoryFiring
Tags:    

Similar News