செய்திகள்

காஷ்மீர் எல்லையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2018-10-19 08:38 GMT   |   Update On 2018-10-19 08:38 GMT
ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். #JKInfiltration #Militantskilled

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பதேவ்காடல் பகுதியில் நேற்று முன்தினம் லஷ்கர்- இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.இந்த துப்பாக்கி சண்டையில் போலீஸ்காரர் ஒருவரும் பலியானார்.

இந்தநிலையில் இன்று எல்லையில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

காஷ்மீர் மாநிலம் பார முல்லா மாவட்டம் உரி செக்டார் எல்லையில் போனியர் என்ற பகுதி உள்ளது. இந்த எல்லைப் பகுதி வழியாக 3 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்கள் துப்பாக்கியால் சுட்டவாறே உள்ளே நுழைய முயன்றனர்.

பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களது ஊடுருவலை முறியடித்தனர். 3 பயங்கரவாதிகளையும் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அவர்களது பெயர், எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் உடனடியாக தெரிய வில்லை. #JKInfiltration  #Militantskilled

Tags:    

Similar News