செய்திகள்

மும்பையில் இருந்து அமெரிக்கா சென்ற விமானத்தில் திடீர் கோளாறு - அகமதாபாத்தில் முடங்கியது

Published On 2018-10-15 14:17 GMT   |   Update On 2018-10-15 14:53 GMT
மும்பையில் இருந்து அகமதாபாத், லண்டன் வழியாக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் திடீர் கோளாறு காரணமாக அகமதாபாத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. #AirIndiaflight #technicalsnag
அகமதாபாத்:

மும்பையில் இருந்து அகமதாபாத், லண்டன் வழியாக அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள நியூஆர்க் நகருக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் சுமார் 130 பயணிகளுடன் இன்று அதிகாலை மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.

வழியில் அதிகாலை 4.50 மணியளவில்அகமதாபாத் நகரில் தரையிறங்கியபோது அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதனால் அந்த விமானம் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோளாறு சீர்படுத்தப்பட்ட பின்னர் நாளை காலை 6.35 மணியளவில் அந்த விமானம் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில பயணிகள் தங்களது இல்லங்களுக்கு திரும்பி விட்டதாகவும், 110 பயணிகள் அகமதாபாத் நகரில் உள்ள ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் இன்று மாலை தெரிவித்தனர். #AirIndiaflight #technicalsnag
Tags:    

Similar News