செய்திகள்

புல்வாமா என்கவுண்டர் - ஒரு பயங்கரவாதியை சுட்டு வீழ்த்தியது ராணுவம்

Published On 2018-10-13 03:39 GMT   |   Update On 2018-10-13 03:39 GMT
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். #JammuAndKashmir #PulwamaEncounter
புல்வாமா:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலை புறக்கணிக்கும்படி பிரிவினைவாத அமைப்புகள் பொதுமக்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளும் எச்சரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர். நேற்று இரண்டு நபர்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.



இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தின் பாப்கந்த் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். பயங்கரவாதிகள் இருந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது இரு தரப்பினருக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

இதில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த ஜகூர் அகமது என்பதும், ராணுவ வீரராக இருந்து, பயங்கரவாதியாக மாறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சண்டை நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் 2 பயங்கரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. #JammuAndKashmir #PulwamaEncounter

Tags:    

Similar News