செய்திகள்

ஆந்திராவில் கொல்லப்பட்ட எம்எல்ஏவின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய சந்திரபாபு நாயுடு

Published On 2018-09-28 11:43 GMT   |   Update On 2018-09-28 11:43 GMT
ஆந்திராவில் மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்ட எம்எல்ஏவின் வீட்டுக்கு சென்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். #ArakuMLA #ChandrababuNaidu
விசாகப்பட்டினம்:

ஆந்திர மாநிலத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏவான கிடாரி சர்வவேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா ஆகியோர் கடந்த 23-ம் தேதி மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மாநிலத்தையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாவோயிஸ்டுகளை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர முதல்வரும் தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று எம்எல்ஏ ராவ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமாவின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல்  கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, ஜனநாயகத்தில் வன்முறைக்கு ஒருபோதும் இடம் இல்லை என்று தெரிவித்தார்.


‘மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்ட எம்எல்ஏ ராவின் மகன்களில் ஒருவருக்கு குரூப்-1 அரசுப் பணி மற்றும் விசாகப்பட்டினத்தில் ஒரு வீடு வழங்கப்படும். அவரது குடும்பத்தினர் 4 பேருக்கும் கட்சி சார்பில்  தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அரசு சார்பில் அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்’ என்றும் நாயுடு அறிவித்தார்.

சந்திரபாபு நாயுடு வருகையையொட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. #ArakuMLA #ChandrababuNaidu
Tags:    

Similar News