செய்திகள்

சாலை விபத்தில் உயிரிழந்த ஹரிகிருஷ்ணா உடலுக்கு அரசு மரியாதை - தெலுங்கானா அரசு அறிவிப்பு

Published On 2018-08-29 14:45 IST   |   Update On 2018-08-29 14:47:00 IST
சாலை விபத்தில் உயிரிழந்த ஹரிகிருஷ்ணாவின் இறுதி யாத்திரை அரசு மரியாதையுடன் நடைபெறும் என தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். #Harikrishna #RIPHariKrishnaGaru
ஐதராபாத்:

ஆந்திர முன்னாள் முதல் மந்திரி என்.டி ராமாராவின் மகனும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நடிகர் நந்தமுரி ஹரிகிருஷ்ணா இன்று சாலை விபத்தில் உயிரிழந்தார். நலகொண்டா மாவட்டத்தில் உள்ள நர்கெட்பள்ளி - அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்ற போது, ஹரிகிருஷ்ணாவின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஹரிகிருஷ்ணா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஐதராபாத் நகரின் அருகே முருதுழகுடா பகுதியில் உள்ள என்.டி.ஆர். குடும்பத்துக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நாளை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும்.

தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாகவும் ஹரிகிருஷ்ணா பணியாற்றியுள்ள ஹரிகிருஷ்ணாவின் இறுதி யாத்திரை அரசு மரியாதையுடன் நடைபெறும் என தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். #Harikrishna #RIPHariKrishnaGaru

Tags:    

Similar News