செய்திகள்

குஜராத்தில் சோகம் - லாரியுடன் கார் மோதிய விபத்தில் 10 பேர் பலி

Published On 2018-08-26 16:39 GMT   |   Update On 2018-08-26 16:39 GMT
குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில் லாரியுடன் கார் மோதிய விபத்தில் 10 பேர் பரிதாபமாக பலியாகினர். #Accident
அகமதாபாத்:

குஜராத் மாநிலம் சூரத் நகரில் பல்சானா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் பலேஷ்வர் கிராமம் அருகில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் 11 பேர் பயணம் செய்தனர். 

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி எதிர்ப்புறம் சென்றது. அப்போது அங்கு வந்த லாரி கார் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.

விபத்து குறித்து அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர். விபத்தில் பலியானவர்கள் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Accident
Tags:    

Similar News