செய்திகள்

ரக்‌ஷா பந்தன் - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு ராக்கி கட்டிய சுஷ்மா ஸ்வராஜ்

Published On 2018-08-26 07:14 GMT   |   Update On 2018-08-26 07:14 GMT
சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் ராக்கி கயிறு கட்டி வாழ்த்து தெரிவித்தார். #HappyRakshaBandhan #RakshaBandhan
புதுடெல்லி:

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்‌ஷா பண்டிகை வட மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுவது உண்டு. பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டுவர், அதற்கு பதிலாக ஆண்கள் தங்களது சகோதரிகளுக்கு பரிசுகள் கொடுக்க வேண்டும். இன்று ரக்‌ஷா பந்தன் பண்டியை வெகு உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.



டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பெண்கள் மற்றும் சிறுமிகள் ராக்கி கட்டினர். அதேபோல, பிரதமர் மோடிக்கும் சிறுமிகள், பெண்கள் ராக்கி கயிறு கட்டி வாழ்த்து தெரிவித்தனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் ராக்கி கட்டி வாழ்த்து கூறினார்.



Tags:    

Similar News