செய்திகள்

பாரமுல்லா என்கவுண்டர் - மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை

Published On 2018-08-09 03:43 GMT   |   Update On 2018-08-09 03:43 GMT
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் நடைபெற்று வரும் தேடுதல் வேட்டையில், மேலும் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #KashmirEncounter
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அம்மாவட்டத்தின் வனப்பகுதியான ரபியாபாத்தில் பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

அவர்களின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி கொடுத்து பயங்கரவாதிகள் மீது சரமாரி எதிர்தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவிக்கப்பட்டது.



பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று மேலும் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். #KashmirEncounter 
Tags:    

Similar News