செய்திகள்

மீண்டும் வாக்குச்சீட்டு முறை - தேர்தல் ஆணையத்தை அணுக 17 கட்சிகள் திட்டம்

Published On 2018-08-02 11:43 GMT   |   Update On 2018-08-02 11:43 GMT
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தை அணுக 17 கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #ParlimentElection2019 #BallotPaper
புதுடெல்லி:

இந்தியாவில் கடந்த சில தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் காகித பயன்பாடு குறைவதாகவும், பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, கடந்த பாராளுமன்ற தேர்தல் உள்பட சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்கள் வரை நடைபெற்ற மின்னணு வாக்குப்பதிவு முறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரஸ், திரிணாமுல், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.



இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தை அணுக 17 கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #ParlimentElection2019 #BallotPaper
Tags:    

Similar News