செய்திகள்

திலகமிட்டு, மாலை சூடி, மண்டியிட்டு - யோகி ஆதித்யாநாத்தை சேவித்த போலீஸ் அதிகாரி

Published On 2018-07-28 09:50 GMT   |   Update On 2018-07-28 09:50 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குரு பூர்ணிமா தினத்தன்று முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் முன் மண்டியிட்டு சீருடையுடன் ஆசிபெற்ற போலீஸ்காரர் படம் வைரலாக பரவி வருகிறது. #UPcop #YogiAdityanath #YogiAdityanathblessings
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் முன்னர் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் ஆலயத்தின் மடாதிபதியாகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில்,  குரு பூர்ணிமா நாளான நேற்று யோகி ஆதித்யாநாத் கோரக்பூர் சென்றிருந்தார். அவரிடம் ஏராளமானவர்கள் ஆசி பெற்றனர். அவ்வகையில், காவல்துறையில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் பிரவோன் குமார் என்பவர், யோகி ஆதித்யாநாத் முன்னர் மண்டியிட்டு அமர்ந்து ஆசி பெறும் புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.



இதேபோல், யோகி ஆதித்யாநாத்துக்கு மாலை அணிவிக்கும் படத்தையும், திலகம் அணிவிக்கும் படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பரவிவரும் நிலையில், இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் இருவேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.

கோரக்நாத் ஆலய மடாபதி என்னும் முறையில்தான் குரு பூர்ணிமா தினத்தன்று அந்த காவலர் ஆதித்யாநாத்திடம் ஆசி பெற்றதாக ஒருதரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளையில், அவர் ஆசி பெற்றதில் தவறில்லை. ஆனால், கண்ணியத்துக்குரிய காவல்துறை சீருடையுடன் அவர் காலடியில் மண்டியிட்டு அமர்ந்திருப்பது ஏற்புடையதல்ல என மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர். #UPcop #YogiAdityanath #YogiAdityanathblessings
Tags:    

Similar News