செய்திகள்

அமர்நாத் பனி லிங்கத்தை தரிசித்தவர்கள் எண்ணிக்கை 2.5 லட்சத்தை கடந்தது

Published On 2018-07-27 14:59 GMT   |   Update On 2018-07-27 14:59 GMT
இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை காலத்தில் பனி லிங்கத்தை தரிசித்தவர்கள் எண்ணிக்கை 2.5 லட்சத்தை கடந்தது. #Amarnathyatra
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஜூன் 28-ம் தேதி முதல் யாத்ரிகர்கள் குழு புறப்பட்டு சென்றது.

மழையினால் சில நாட்கள் தடைபட்ட யாத்திரை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு யாத்திரை காலத்தின் 30 நாளான இன்று 2,776 யாத்ரீகர்கள் பனி லிங்கத்தை தரிசினம் செய்தனர்.

இவர்களுடன் சேர்த்து 2 லட்சத்து 51 ஆயிரத்து 996 பக்தர்கள் இதுவரை பனி லிங்கத்தை தரிசித்துள்ளதாக  அமர்நாத் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. #Amarnathyatra
Tags:    

Similar News