செய்திகள்

டெல்லியில் ரூ.50 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் - 2 பேர் கைது

Published On 2018-07-26 15:43 GMT   |   Update On 2018-07-26 15:43 GMT
ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், சுமார் 535 கிலோ எடை கொண்ட கஞ்சாவை கடத்திய இருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். #Delhi #CannabisCaptured
புதுடெல்லி:

டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகின்றனர்.

இந்நிலையில், அதிக அளவிலான கஞ்சா கடத்தப்பட இருப்பதாக டெல்லி சிறப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில்,  அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார் லாரியில் கடத்தி வரப்பட்ட சுமார் 535 கிலோ எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.



இதன் மதிப்பு சுமார் 50 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கஞ்சாவை கடத்தி வந்த 2 நபர்களை  கைது செய்த காவல்துறையினர் அவர்களின் பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Delhi #CannabisCaptured
Tags:    

Similar News