செய்திகள்

டெல்லியில் நிதி மந்திரியுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு

Published On 2018-07-25 14:38 IST   |   Update On 2018-07-25 14:38:00 IST
தமிழக திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நிதி மந்திரியை சந்தித்து தமிழக அமைச்சர்கள் பேச்சு நடத்தினர்.
புதுடெல்லி:

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் டெல்லி சென்றனர். இன்று அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நிதி மந்திரியும் மின்சாரத்துறை மந்திரியுமான பியூஸ் கோயலை சந்தித்துப் பேசினார்கள்.

அப்போது தமிழக திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோருதல் உள்பட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து பேச்சு நடத்தினார்கள்.
Tags:    

Similar News