செய்திகள்

பெண் சாமியாரிடம் சீருடையில் ஆசி வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

Published On 2018-07-23 10:55 GMT   |   Update On 2018-07-23 10:55 GMT
டெல்லி காவல்துறையில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீருடையுடன் பெண் சாமியாரிடம் ஆசி வாங்கிய காரணத்துக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். #DelhiPolice
புதுடெல்லி:

டெல்லி ஜனக்புரி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் இந்திரபால் சிங். உத்தம் நகர் பகுதியில் பெண் சாமியார் நமிதா ஆச்சாரியா என்பவரிடம் இவர் ஆசி வாங்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் உலா வந்தன. போலீஸ் சீருடையுடன் அவர் தோன்றியதால் பல்வேறு எதிர் விமர்சனங்களும் எழுந்தன.

இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் துணை கமிஷனர் விஜய் குமார் இன்று தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #DelhiPolice
Tags:    

Similar News