செய்திகள்

125 கோடி மக்கள்தான் என் பலம் - பிரதமர் மோடி கருத்து

Published On 2018-07-22 22:20 GMT   |   Update On 2018-07-22 22:20 GMT
125 கோடி மக்கள்தான் என் பலம். மக்களுக்காகவே என்னுடைய எல்லா நேரத்தையும் செலவிட்டு வருகிறேன் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார். #NarendraModi
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடியை டுவிட்டரில் ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பின்தொடர்ந்து வருபவர்களின் பதிவுகளுக்கு மோடி உடனுக்குடன் பதிலும் அளித்து வருகிறார்.

மும்பையை சேர்ந்த ஷில்பி அகர்வால் என்ற பெண், ‘மோடிஜி நீங்கள் எப்போதும் புன்னகையுடன் இருக்கிறீர்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார். அதற்கு மோடி, ‘புன்னகை’ என்ற வார்த்தையை எடுத்து பதிலாக பதிவிட்டு இருந்தார்.

மற்றொரு டுவிட்டர் பதிவில், ‘இந்த வயதிலும் நீங்கள் அயராது பணியாற்றி வருகிறீர்களே’ என பாராட்டு தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு பதில் அளித்த மோடி, ‘125 கோடி மக்கள்தான் என் பலம். மக்களுக்காகவே என்னுடைய எல்லா நேரத்தையும் செலவிட்டு வருகிறேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஷோபா ஷெட்டி என்ற பெண்ணின் டுவிட்டர் பதிவில், ‘நாடாளுமன்ற மக்களவையில் உங்களின் பேச்சு பாராட்டுக்குரியது. இந்தியா மோடியை நம்புகிறது’ என்று தெரிவித்து இருந்தார். அதற்கு மோடி, ‘உங்களின் அன்பான வார்த்தைக்கு நன்றி’ என்று பதில் அளித்தார்.

மேலும் பிரதமர் மோடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்தகுமார், மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து உள்ளார்.   #NarendraModi  #tamilnews
Tags:    

Similar News