செய்திகள்

டெல்லியில் பெண் வக்கீல் கற்பழிப்பு - மூத்த வக்கீல் கைது

Published On 2018-07-15 23:29 GMT   |   Update On 2018-07-15 23:29 GMT
டெல்லியில் கோர்ட்டில் உள்ள வக்கீல்கள் அறையில் மதுபோதையில் பெண் வக்கீலை கற்பழிப்பு செய்தது தொடர்பாக மூத்த வக்கீலை போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி:

டெல்லியில், சாகேத் கோர்ட்டில் வக்கீலாக பயிற்சி பெறும் ஒரு பெண், நேற்று முன்தினம் நள்ளிரவு, போலீசாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அதே கோர்ட்டில் மூத்த வக்கீலாக தொழில் செய்யும் 50 வயதை தாண்டிய ஒருவர், கோர்ட்டில் உள்ள வக்கீல்கள் அறையில் மதுபோதையில் தன்னை கற்பழித்து விட்டதாக அவர் கூறினார்.

அதன்பேரில், மூத்த வக்கீலை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பாதிக்கப்பட்ட பெண் வக்கீலின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அறைக்கு சீல் வைக்கப்பட்டது. அறையை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். 
Tags:    

Similar News